இன்று நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் சங்கம் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் வேலைநிறுத்தம் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி செயலகம் அதிவிசேட வர்த்தமானியாக வெளியிட்டுள்ளது.

0 Comments