முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாவும் அசாத் சாலியும் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக, வேறு தரப் பினர் மீது ஆள்மாறி விரல்நீட்டுவது கவலைக்குரிய விடயம் என முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் ஷாபி கைது சமூகமொன்றின் மீதான இனவாதம் என குறிப்பிட்டுள்ள அவர் தாங்கள் அன்று கூட்டாக ராஜினாமா செய்யாத விடத்து முஸ்லிம் சமூகத்தின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து வந்திருக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ரத்ன தேரரின் உண்ணாவிரதம் தொடக்கம் நடைபெற்ற அனைத்தையும் தாங்கள் அவதானித்தாக கூறிய அவர் சிறையில் இருந்து வெளியே வந்த ஞானசார தேரர் சொன்ன விடயங்கள் மக்கள் மத்தியில் மேலும் பீதியை அதி கரித்ததாக கூறினார். பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் மிக அழுத்தமான ஒரு செய்தியை வழங்க கூட்டு நடவடிக்கை ஒன்றை செய்யவேண்டும் என்பதை தவிர வேறு வழி இல்லாத நிலையில் கூட்டாக பதவி விலகியதாக அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது ,
முஸ்லிம்கள் கூட்டாக இந்த வித நடவடிக்கை எடுத்தாலும் நாட்டில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பௌத்த பீடங்கள் விடுத்த அறிக்கை மூலம் எமக்கு மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.தேவையற்ற பீதியை பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பிலும் நாம் பகிரங்கமாக கதைக்க வேண்டிய தேவை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: