Home » » தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு! ஐந்து பேர் பலி! மூவர் மாயம்!

தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு! ஐந்து பேர் பலி! மூவர் மாயம்!

ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், ஒரு மசூதியில் நேற்று முன்தினம் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
அவர்கள் வந்து இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.பின்னர் தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன் அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்திச்சென்றனர்.
இந்த தாக்குதலின்போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் பொலிசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என உடனடியாக தெரிய வரவில்லை. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |