Home » » றிசாட் மற்றும் ஹிஸ்புல்லாவால் கடும் நெருக்கடியில் ஜனாதிபதி!

றிசாட் மற்றும் ஹிஸ்புல்லாவால் கடும் நெருக்கடியில் ஜனாதிபதி!

முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இருவரையும் உடன டியாக அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகவேனும் நீக்குமாறு ஜனாதி பதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஐ.தே.க வின் நாடாளுமன்ற உறுப்பினரான றிசாட் பதியுதீன் தற்போது வர்த்தக கைத்தொழில்,நீண்டகால இடம் பெயர்ந்தோர் கூட்டுறவு அபிவிருத்தி,வாழ்க்கைத்திறன் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ளார். அதேபோன்று சுதந்திரக்கட்சி உறுப்பினரான ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக உள்ளார்.
அமைச்சுப் பதவியிலிருந்து றிசாட் பதியுதீனை நீக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.
சங்கரிலா மற்றும் சினமன்ட் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தற்கொலைதாரி களான சகோதரர்களின் தந்தையான யூசுப் மொகமட் இப்ராஹிம் உடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள் ளார் என அமைச்ர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்..அதேபோன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகம் தொடர்பில் முஸ்லிம் அடிப்டைவாதிகளுக்கு கற்பிப்பது தொடர்பில் உதவி புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்நோக்கியுள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.எனவே பரப்பப்படும் வதந்திகளுக்கு முன்னர் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |