Home » » ஊரடங்கு நேரத்தில் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

ஊரடங்கு நேரத்தில் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலைகளை மறுசீரமைக்கவுள்ளது.
இதற்கமைய பெற்றோல் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதோடு, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 9 ரூபாவால் குறைப்பதற்கும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஐ.ஓ.சியின் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 140 ரூபாவுடன், ஒட்டோ டீசலின் விலை 104 ரூபாவாகும்.
தென்னிலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் நாடு பூராகவும் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |