காத்தான்குடி பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெருமளவான கணனி உபகரணங்கள் மற்றும் சீடிக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை முதல் காத்தான்குடி பகுதியில் பொலிஸார்,இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பள்ளிவாசல்கள் மற்றும் சில பாடசாலைகள்,வீடுகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த பெருமளவு கணனிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் மார்க்க விடயங்கள் தொடர்பான பல்வேறு சீடிக்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பில் ஐந்து பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 comments: