Home » » கிழக்கில் வருகிறது விசேட பாதுகாப்புத் திட்டம்!

கிழக்கில் வருகிறது விசேட பாதுகாப்புத் திட்டம்!

ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலாக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பாதுகாப்புக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது நிலைமை வழமைக்கு திரும்பி வருகிறது. இருந்த போதிலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று அலுவலகங்கள் வழமை போல் இயங்கின. போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெற்றன. மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பியிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |