தற்கொலை குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காக பயன்படுத்திய வான் சாரதி மற்றும் வானை வடைக்கு கொடுத்த 3 பேர் இன்று செவ்வாய்க்கிழமை காலை (30) மட்டு. மாவட்ட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வானையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை (29) இரவு தற்கொலை குண்டுதாரிகள் ஆடைவாங்க பயன்படுத்திய வானை கல்லடி பிரதேசத்தில் வைத்து மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து வானை ஓட்டிச் சென்ற பத்திரிகைகளை விநியோகிக்கும் ஏஜன்சியில் சாரதியாக கடமையாற்றிய காத்தான்குடி 4 ம் பிரிவு 3 ம் பழைய வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹமட் றிபாஸ் என்பவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேரை கைது செய்தனர்
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வான் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டுதாரிகள் வான் ஒன்றை வாடைகைக்கு எடுத்துவரும்படி தெரிவிக்கப்பட்ட தையடுத்து றிபாஸ் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வான் சாரதியிடம் வான் ஒன்று வாடகைக்கு தேவை என தெரிவித்ததையடுத்து யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம். தனுஷன் என்பவரிடம் வான் ஒன்று தேவை என தெரிவித்தார்.
இதனையடுத்து தனுஷன், சோபனா என்பவரின் வானை வாடைகைக்கு எடுத்து யூட்டிடம் வாடகைக்கு வழங்கியுள்ளார். இதனை யூட் றிபாசிடம் வாடகைக்கு வழங்கியுள்ளார் எனவும் இந்த வானில் தற்கொலை குண்டுதாரிகளான 3 பேரையும் குழந்தைகளை ஏற்றிச் சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை உடுப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பிலுள்ள சிஐடி யினரின் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை சிஐடி யினர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
0 comments: