Advertisement

Responsive Advertisement

புத்தளத்தில் சிக்கிய மற்றுமொரு ஆயுத கிடங்கு


இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் புத்தளத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வனாத்தவில்லு, கரடிப்பூவல், லக்ரோ தோட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி65 துப்பாக்கி ஒன்றும், பல 9 மி.மீ கைத்துப்பாக்கிகள் பலவும், உள்ளூர் தயாரிப்பு கல்கட்டாஸ் துப்பாக்கிகளும் உள்ளடங்குகின்றன.
குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் சாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி வனாத்தவில்லு பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. அவையும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments