Home » » தற்கொலைதாரிகள், மனைவியர் உள்ளிட்டோரின் பெயர்களில் 18 வாகனங்கள்

தற்கொலைதாரிகள், மனைவியர் உள்ளிட்டோரின் பெயர்களில் 18 வாகனங்கள்

உயிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலைதாரிகள் சுமார் 18 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் 6 வான்கள், 9 மோட்டார்சைக்கிகள், 2 கார்கள் மற்றும் ஒரு கெப் வாகனம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்கொலைதாரிகள் மற்றும் அவர்களது மனைவியர், உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
மேலும் குறித்த 18 வாகனங்களில் ஆறு வாகனங்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |