Home » » இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!

இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!

பிரித்தானியாவும், ஜேர்மனியும் இணைந்து இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளன . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த இந்த புதிய தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
A/HRC/40/L.1 என்ற இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜெர்மனி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசடோனியா, பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் அனுசரனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |