Home » » 6 தமிழ்க் கட்சிகளின் மனு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!

6 தமிழ்க் கட்சிகளின் மனு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மூன்று விடயங்களை உள்ளடங்கி, ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்களால், கைச்சாத்திடப்பட்ட மகஜர் நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்பட வேண்டும், 30 -1 மற்றும் 34- 1 ஆகிய தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா. ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |