நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் என, கெடம்பே, ராஜோபவனாராமாதிபதி கெப்பிடியாகொட ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தேரரை நேற்று சந்தித்தார். இதன்போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
|
நாட்டில் தற்போது குழப்ப சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ளது. இவை அனைத்திற்கும் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். அவர் தனது பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது. ஜனாதிபதி நல்ல மனிதர் என்ற போதிலும், அவரது அதிகாரங்கள் சிலரினால் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் தேர்தல், சட்டம், ஒழுங்கு என எதுவுமின்றி ஒரு தன்னிச்சையான ஆட்சி நிலவுகின்றமையை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» குழப்பங்களுக்குக் காரணம் ஜனாதிபதியே! - முக்கிய பௌத்த பிக்கு குற்றச்சாட்டு
குழப்பங்களுக்குக் காரணம் ஜனாதிபதியே! - முக்கிய பௌத்த பிக்கு குற்றச்சாட்டு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: