Home » » சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும்! கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்

சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும்! கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்

சிறிலங்காவில் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் அமுலாக்கப்படவில்லை என சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனிதவுரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்தும் சிறிலங்கா அரசாங்கம் பல முக்கியமான நடைமுறைகளை இன்னும் அமுலாக்கவில்லை.
குறிப்பாக இன்னும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் உருவாக்கக்கப்படவில்லை.
இந்த விடயங்களை அமுலாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக ஐக்கியநாடுகளின் மனிதவுரிமை பேரவை எதிர்வரும் 40ஆவது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நீதிபதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |