எறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றுக்குள் இரவு வேளையில் திடீரென உட்புகுந்த இரு பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் இரவு றிபாய் பள்ளியை அண்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வீட்டிலிருந்த சுமார் 4 வயதுக் குழந்தை, அக்குழந்தையின் தாய் மற்றும் வீட்டின் கண்ணாடிகள், ஜன்னல்கள், வேறு சில பொருட்கள் என்பன தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரின் மருதமுனை கிராம நீதிமன்ற வீதியை அண்டி வசிக்கும் தாயும் மகளுமான இரு பெண்களே வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
படுகாயமடைந்த குழந்தையும் தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறே குறித்த தாக்குதலின் அடிப்படையாக அமைந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
0 comments: