Advertisement

Responsive Advertisement

இந்தியாவில் பயங்கரக் குண்டுகள் வெடிக்கலாம்; அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

இந்தியாவில் திவிரவாதிகள் தாக்குதல்களை முன்னெடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்கானிஸ்தானிலும் இந்த தீவிரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என அவர் கூறியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க சார்பு மையங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு செய்தி கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா அமெரிக்க சார்பான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதனால் அங்குள்ள அமெரிக்க நிலைகள் மீது தீவிரவாதிகள் குறிவைக்ககூடும் என அந்த அதிகாரி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments