மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவந்த நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒரு தற்கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்றே கண்டெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதினை உடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையாக பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 Comments