Home » » உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு: விண்ணப்பங்கள் ஜனவரி 16ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு: விண்ணப்பங்கள் ஜனவரி 16ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த் தடவை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3,21,469 பரீட்சாரத்திகள் தோற்றியிருந்த நிலையில், இவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை பரீட்சையில் சித்தியடைந்த 1,60,907 மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வௌியாகின.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது, 0112 78 42 08 / 011 2 78 45 37 / 011 31 88 350 அல்லது 011 3 14 03 14 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |