ஜனநாயகத்துக்கும்நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறைஇன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு பலமாக உணர்த்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறைக்கு நாங்கள்தலைசாய்ப்பதோடு, ஜனநாயகப் போராட்டத்தில் எம்முடன் உழைத்த அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமென எமதுகோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமதுநன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.


0 Comments