Home » » யாழ். சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகில் சடலம் - இன்று காலையில் அதிர்ச்சி

யாழ். சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகில் சடலம் - இன்று காலையில் அதிர்ச்சி

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள பாவணைக்குட்படுத்தாத வீட்டில் சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் செய்யும் இவர் இந்த வீட்டிற்கு சென்று அங்கு உறங்கிய வேளையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதிக்குச் சென்ற நபர்கள் இவர் சடலமாக கிடப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |