Home » » நாடாளுமன்றில் மிளகாய்த் தூள் தாக்குதல்: கண்ணீர்விட்டு அழுத உறுப்பினர்!

நாடாளுமன்றில் மிளகாய்த் தூள் தாக்குதல்: கண்ணீர்விட்டு அழுத உறுப்பினர்!

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலைகள் மற்றும் அடாவடித் தனங்களில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்றச் செய்தியாளர் கூறுகின்றார்.
கதிரைகளால் எறிந்தும் புத்தக ஆவணங்களால் எறிந்தும் மிளகாய்த் தூள் விசிறியும் இந்த வன்முறைகள் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சில உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன் ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு உள்ளானதுடன் அதுகுறித்து கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
“மிளகாய்த் தூளை என் மீது வீசியவர்களை என்ன செய்வீர்கள் ஜனாதிபதி? இது தான் உங்கள் ஜனநாயகமா?” என்று அவர் உருகமாக கேட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |