மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் மாத்திரமின்றி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு அப்பதவிகளில் நீடிக்க இனியும் உரிமை இல்லை. அவர்கள் பதவி விலகாவிடின் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர்” என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துளார்.நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவருக்கு வழங்கப்பட்ட பதவி மீதும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றத்தில் இன்றுடன் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.(15)
0 comments: