Home » » எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யும்! அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கை

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யும்! அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கை


எதிர்வரும் சில மணித்தியாலங்களில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய , ஊவா , சபரகமுவ , வட மத்தி , வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கடும் காற்று வீசக் கூடும் என்பதுடன் கடும் இடி மின்னல் நிலைமை ஏற்படக் கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனர்த்தங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |