Home » » குருமண்வெளி பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு போட்டி

குருமண்வெளி பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு போட்டி

செ.துஜியந்தன் 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் குருமண்வெளி பொதுநூலகத்தில் தேசியவாசிப்பு மாதத்தையிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு மற்றும் சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுசரணையில் நடைபெற்ற வாசிப்பு போட்டியில் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற போட்டிகளில் பிரதேச சபை உறுப்பினர் ம.இளங்கோ, அகரம் செ.துஜியந்தன், நூலக உதவியாளர் சீ.ரவீந்திரன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். 



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |