Home » » பஸ் சங்கங்கள் சில நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்திற்கு திட்டம்?

பஸ் சங்கங்கள் சில நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்திற்கு திட்டம்?


கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர் சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

வீதி ஒழுங்குவிதிகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டும் மற்றும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை காரணமாக தாங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என பிரதான பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |