Home » » இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது : தயாசிறி

இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது : தயாசிறி


இரண்டு தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியில் ஒரு தலைவரே இருக்க முடியும். இரண்டு பேர் இருக்க முடியாது இதனால் இரண்டு தலைவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. தற்போது அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரன்பாடுகளுக்குள் நாங்களே சிக்கிக்கொண்டுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |