செ.துஜியந்தன்
இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மூன்று நாள் வதிவிடச்செயலமர்வு பாண்டிருப்பு அண்ணாமன்ற கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் மகளிர் அணித்தலைவி செல்வி ராமர் அன்னலெட்சுமி தலைமையில் இவ் வதிவிடச்செயலமர்வில் யோகாசனம், சூரியநமஸ்காரம், தற்காப்புக்கலை, சமயம் சம்பந்தமான கருத்தரங்குகள், தெளிவூட்டல்கள், மூச்சுப்பயிற்சிகள் ஆகியன துறைசார்ந்த பயிற்சியாளர்களினால் வழங்கப்பட்டன.
இதில் இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் வளவாளர்களாக திருமதி சத்தியா தமிழ்ச்செல்வன், செல்வி சி.இந்துமதி, செல்வி மு.மதிரூபி, அடியவன் கவி பிரமின் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு 25 பெண் மாணவிகள் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்து ஸ்வயம் சேவா சங்கம் இலங்கையில் கடந்த 16 வருடகாலமாக சேவையாற்றிவருகின்றது. இங்கு 100 கிளைகள் அமைக்கப்பட்டு பெண்களும் இணைக்கப்பட்டு அவர்களுக்கான வதிவிடச்செயலமர்வும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: