Home » » வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட நாம் தயாரில்லை. இன்று 10 ஆவது நாளாகவும் மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொத்துவில் கனகர்கிராம பொதுமக்கள்.

வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட நாம் தயாரில்லை. இன்று 10 ஆவது நாளாகவும் மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொத்துவில் கனகர்கிராம பொதுமக்கள்.

செ.துஜியந்தன்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள தம்pழ் மக்கள் வனபரிபாலன சபையினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது காணியினை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இன்று(23) வியாழக்கிழமை பத்தாவது நாளாகவும் தொடர்போராட்டத்தில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இம் மக்களின் போராட்டத்திற்க்கு அரசியல்வாதிகளும், பொதுநல அமைப்புக்களும் தமது ஆதரவினை வழங்கிவருகின்றன. 

கடந்த 28 வருடங்களாக பொத்துவில் கனகர்கிராமத்து மக்களின் குடியிருப்புக்காணியினை வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களம் இது தமக்குரிய பகுதியென கையகப்படுத்தி எல்லைகள் இட்டு கனகர்கிராமத்து மக்களை அதனுள் செல்லவிடாது தடுத்துவருகின்றனர். 1981 இல் 30 வீடுகள் இங்கு இருந்துள்ளன.  70 வருடங்களுக்கு முன்பும்  வளமோடும் செழிப்போடும் 270 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சேனைப்பயிர்ச்செய்கை செய்து வசித்துவந்துள்ளனர். 
கடந்த கால யுதத்த சூழலில் பல தடவைகள் இடம் பெயர்ந்த கனகர் கிராம மக்களின் காணியினை இராணுவத்தினரும், வனவிலங்கு திணைக்களமும் மாறி மாறி பிடித்துவைத்துள்ளனர். இந் நிலையில் இம் மக்களின் காணியினை 28 வருடங்களாக வனவிலங்கு பகுதியினர் அடத்தாக கிடித்து வைத்துள்ளனர். 
28 வருடங்களாக பொறுத்துப்பார்த் மக்கள் இன்று வீதிக்கு இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று (24) வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொத்துவில் பிரதேச செயலாளர் அரச அதிபரோடு பேசியதற்க்கு இணங்க கனகர்கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க அரசஅதிபர் வருகைதரவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
இனியும் அரசியல் வாதிகளின் வாக்குறுதியை நம்பி ஏமாற நாம் தயாராகயில்லை. எமது காணிக்குரிய உரிய தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொத்துவில் கனகர்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |