செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஷீரடி சாய் பக்தரான மாதாஜீ சீதா விவேக்கின் எண்ணத்தில் மாபெரும் ஷீரடி கருணாயலம் ஒன்று அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஷீரடி கருணாலய ஸ்தாபகர் மாதாஜீ சீதா விவேக் தலைமையில் கடந்தவாரம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் உட்பட பிரதேச செயலாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆன்மீக தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இங்கு இந்தியாவின் செனனை மாநகரில் இருந்து வருகைதந்த வேதாகமக் குழுவினரால் குருஸ்தானம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது. கல்லாற்றைச்சேர்ந்த மாதாஜீ சீதா விவேக் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசித்துவருகின்றார். ஷீரடி சாய் மீது மிகுந்த பக்தி கொண்டவராக திகழும் மாதாஜீ சீதா விவேக் சமூகத்தில் வறுமை நிலையிலுள்ள மக்களின் அல்லல்களைத் தீர்க்கும் முயற்சியில் மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றார்.
திருக்கோவில் பிரதேசத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அழகான ரம்மியம்மிக்க சூழலில் இக் கருணாலயம் அமையவுள்ளது. தானம், நற்கருணை, அன்பு ஆகியவற்றைக் சமூகத்தில் கட்டியெழுப்பும் வகையில் ஷீரடி சாய் கருணாலயம் உருவாகவுள்ளது. தான் வாழும் காலத்தில் தன்னால் முடிந்த சேவையினை ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு மாதாஜீ சீதா விவேக் இக் கருணாலயத்தை அமைத்தள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் அமையவுள்ள ஷீரடி சாய் கருணாலயம் மாதாஜீ சீதா விவேக்கின் குடும்பபங்களிப்புடன் மட்டுமே அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோவில் ஷீரடி சாய் கருணாலயம் இந் நாட்டுக்கோர் வரப்பிரசாதமாகும்.
0 comments: