Home » » தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

எனது நகைகளை மிகவும் திட்டமிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரே திருடிச் சென்றுள்ளார். என பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
என்னை அழைத்துச் சென்று எனது நகைகளை கழட்டி எடுத்துச் சென்றவர் போலி வைத்தியர் அல்ல அவர் ஒரு வைத்தியராகவே இருக்க வேண்டும்.
அவரிடம் ஒரு கண் வைத்தியருக்குறிய அத்தனை அடையாளங்களும் இருந்தது.
அவரிடம் கண்ணை பரிசோதிக்கும் டொச் லைட், மற்றும் பெரிய, சிரிய இலக்கங்கள் கண் பரிசோதனை பைல் என்பன இருந்தது.
அத்துடன் அந்த முஸ்லீம் பெண் வைத்தியர் என்னை பரிசோதித்த அறையில் இரண்டு பேர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் விசாரணையில் என்னை தெரியாது என்றும் நான் அந்த அறைக்குள் வரவில்லை என்றும் பொய் சொல்லியுள்ளனர் எனவே இது ஒரு திட்டமிட்ட திருட்டு.
எனக்கு நன்றாக தெரியும் முஸ்லீம் பறிதா போட்டு முஸ்லீம் பாசையில் பேசிய அந்த பெண் ஒரு வைத்தியராகத்தான் இருக்க வேண்டும். அவர் போலி வைத்தியர் இல்லை இதனை வைத்தியசாலை நிர்வாகம் மூடிமறைக்க பார்க்கிறது.
போன்ற இன்னும் பல பரபரப்பு தகவல்களை ஐ.பி.சி. தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.
காணொளியை பாருங்கள்
இது குறித்து ஏற்கனவே வந்த செய்திகள்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (09/08/2015) போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது...
மட்டக்களப்பு நாவற்குடாவைச்சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.
குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன். இன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.
கர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தற்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த போலி வைத்தியப்பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.
அதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நூதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக செல்லும் எந்த பெண்களும் தங்க நகை அணிந்து செல்வதை தவிர்கவும்.அது போதனா வைத்தியசாலை என்பதால் வைத்திய பீட மாணவர்களை போல் வேடமிட்டு தங்க நகைகளை திருடப்படலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |