Home » » நான்கு மில்லியன் ஒதுக்கீட்டில் பன்குடாவெளி கிராம வீதி மற்றும் மைதானம் அபிவிருத்தி…

நான்கு மில்லியன் ஒதுக்கீட்டில் பன்குடாவெளி கிராம வீதி மற்றும் மைதானம் அபிவிருத்தி…

நான்கு மில்லியன் ஒதுக்கீட்டில் பன்குடாவெளி கிராம வீதி மற்றும் மைதானம் அபிவிருத்தி…

பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்.



மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொண்டு வரப்பட்ட நிதியில் இரு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பன்குடாவெளி பிரதேசத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பன்குடாவெளி கிராமத்தில் இரண்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக நான்கு மில்லியன் ரூபாய்களை பொருளாதார, கொள்கை திட்டமிடல் அமைச்சு ஒதுக்கியுள்ளது.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களின் சார்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னதுரை சர்வானந்தன் மற்றும் கிராம  அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பன்குடாவெளி துறையடி வீதி மற்றும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழக மைதானத்தின் அபிவிருத்திக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பன்குடாவெளி கிராம மக்களும் மீனவர்களும் பெரிதும் சிரமத்தின் மத்தியில் பயணம் செய்து வந்த இந்த துறையடி வீதியை விரிவாக்கம் செய்து கொங்ரிட் இடுவதற்காக இரண்டு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை செப்பனிடுவதன் மூலமாக நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான், கற்குடா ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும், மீனவர்களும் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

அத்துடன் இக்கிராமத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் எவரெஸ்ட் விளையாட்டுக் கழக மைதானமும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. சுற்று மதில்களுடன், கூடிய நவீன மைதானமாக இம் மைதானம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதற்காக  இரண்டு மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ள குறிப்பிட்ட வீதி மற்றும் மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் து.மதன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் ஆகியோரால் பார்வையிடப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |