Home » » மட்டக்களப்பு வாழைச்சேனையில் சடலமொன்று மீட்பு !!!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் சடலமொன்று மீட்பு !!!

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில், தியாவட்டவான் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை இன்று காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர் 55 - 60 வயதிற்கு இடைப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |