Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தம்புள்ள மைதானத்தில் போட்டியின் போது நடந்த சண்டை! 10 பேர் கைது


தம்புள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டியின் போது மைதான பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பம் தொடர்பாக 10 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் மேலும் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு அமைதியின்மை ஏற்பட்ட போது சிலர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் என்ன காரணத்திற்காக ஏற்பட்டது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)

Post a Comment

0 Comments