Advertisement

Responsive Advertisement

15 வருடங்களில் பின் பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் : பார்வையிட 3 இடங்களில் முகாம்கள்


15 வருடங்களுக்கு பின்னர் நாளை (31) பூமிக்கு மிக அருகில் வரவுள்ள செவ்வாய்க் கிரகத்தை பார்வையிடுவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 3 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் நாளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை முகாமொன்று அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை இவற்று மேலதிகமாக பொலனறுவை , திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

நாளைய தினம் பூமிக்கு 57.6 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் செவ்வாய்க்கிரகம் பயணிக்கவுள்ளது.

இதேவேளை 2020இலும் அதனை தொடர்ந்து 2035ஆம் ஆண்டிலும் இதேபோன்று செவ்வாய்கிரகம் பூமிக்கு அருகில் வரவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments