வவுனியாவில் வெள்ளை வேனில் 8 மாத குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் பிள்ளையை கடத்தியுள்ளது. வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது
|
தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகிறார். தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் குறிப்பிட்டிருந்தார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தேடுதல் நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.
![]() ![]() |
0 Comments