Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பஸ் கட்டணத்தை அதிகரிக்க திட்டம்! : டொலரின் பெறுமதி அதிகரிப்பின் தாக்கம்


டொலரின் பெறுமதி அதிகரிப்பால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையில் பஸ் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவதுடன் மற்றைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. இதனால் பஸ் கட்டணங்களையும் உயர்த்த வேண்டி வருமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments