இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடக்கவுள்ள போதும் தொழிற்சங்கவாதிகளை நினைவு கூறும் வகையில் அந்த கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு அபயராம விகாரையில் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.
முன்னிலை சோஷலிச கட்சி உள்ளிட்ட கட்சிகள் சிலவும் மற்றும் தொழிற்சங்கங்கள் சிலவும் கொழும்பில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இதேவேளை ஜே.வி.பி கொழும்பில் 7ஆம் திகதி பிரதான மேதின பேரணி மற்றும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள போதும் இன்றைதினம் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது. -(3)
0 comments: