மட்டக்களப்பு- ஆரையம்பதியைச் சேர்ந்த, வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை மாணவி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி, பொதுச் சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார். கடந்த 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 1இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜதுர்ஸ்ரிக்கா (வயது 17), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
0 Comments