தற்போது தங்கத்திற்கான இறக்குமதி தீர்வை அறவிடப்படுவதால் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தரமற்ற தங்கத்தை பயன்படுத்தி நகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படலாம். இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென்பதுடன் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் தர முத்திரை இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அந்த சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான 15 வீத வரியை அறவிட அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. இதனால் ஒரு பவுன் நிறையுடைய 22கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் தற்போது சந்தையில் 58,000 ரூபா வரை தங்கத்தின் விலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.-(3)
0 Comments