Home » » இலங்கை அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா

இலங்கை அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா


உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிரா­க­ரித் துள்­ளார் என்று சிங்­கள ஊட­கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சர்ப்பிக்க முன்னாள் ஐ. நா செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழுவின் முக்கிய உறுப்பினராக சூகா இடம்பெற்றிருந்தார். இந்த அறிக்கையில் இலங்கை அரச படை­யி­னர் 40 ஆயி­ரம் அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைக் கொன்று குவித்­த­னர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ந்தும் அவர் இலங்கை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிட்டுவருகிறார்.
அடுத்­த­மா­தம் அவர் பய­ணம் செய்­வார் என்­றும் கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தான் இலங்­கைக்­குப் பய­ணம் செய்­தால் எதிர்ப்­புக் கிளம்­பும் என்­ப­தால் அவர் பய­ணத்தை ஒத்­தி­வைத்­தார் என்று அந்த ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |