உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் தலை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகா விடம், இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிராகரித் துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சர்ப்பிக்க முன்னாள் ஐ. நா செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழுவின் முக்கிய உறுப்பினராக சூகா இடம்பெற்றிருந்தார். இந்த அறிக்கையில் இலங்கை அரச படையினர் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ந்தும் அவர் இலங்கை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிட்டுவருகிறார்.
அடுத்தமாதம் அவர் பயணம் செய்வார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தான் இலங்கைக்குப் பயணம் செய்தால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் அவர் பயணத்தை ஒத்திவைத்தார் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments