Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத்தை முடக்கினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை மே 8ஆம் திகதி வரை முடக்கி வைத்துள்ளார். நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவில், கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும், மே 8 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், எந்த பிரேரணைகளையும் முன்வைக்கவோ, கேள்விகளை முன்வைக்கவோ முடியாது. கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர், மே 8ஆம் நாள் ஆரம்பமாகும் என்று நேற்றிரவு வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக நாடாளுமன்றம், 2009 மே 17ஆம் நாள் முடக்கப்பட்டது. அப்போது போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.தற்போது, சிறிலங்கா அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 19ஆம் நாள் நடைபெறவிருந்த அமர்வில், எதிரணியில் அமரப் போவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் இந்த முடிவை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய அவரது செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்த முடிவுக்கான காரணம் எதையும், வெளியிடவில்லை.

Post a Comment

0 Comments