எருவில் கிராமத்தில் உள்ள பழம்பெரும் இடமான கொம்பு சந்தியில் உள்ள தர்மக்கிணற்றடி பிரதேசத்தில் சமூர்த்தி உத்தியோகத்தரின் தலைமையில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக நேற்று இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அண்மையில் எருவில் கிராமத்திற்கு வருகை தந்திருந்தபோது எருவில் கிராமத்தில் இதுவரை காலமாக அபிவிருத்தி காணாமல் உள்ள பல வீதிகள், மைதானம், வாசிகசாலை போன்ற பல விடயங்களை பார்வையிட்டார்.
அதன்போது எருவில் கிராமத்தின் பாரம்பரியத்தினை எடுத்துக்காட்டும் இடங்கள் பற்றி கூறியபோது அதனை மீள் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு அமைவாக கொம்பு முறி சந்தி (கொம்புச்சந்தி) அதன் அருகில் உள்ள தர்மக்கிணற்றடி இடம் போன்றவற்றின் வரலாறுகளைப்பற்றி எடுத்துக்கூறியபோது இந்த இடங்களை சிரமதானம் செய்து பாரம்பரியங்களை கட்டிக்காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நேற்று சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அண்மையில் எருவில் கிராமத்திற்கு வருகை தந்திருந்தபோது எருவில் கிராமத்தில் இதுவரை காலமாக அபிவிருத்தி காணாமல் உள்ள பல வீதிகள், மைதானம், வாசிகசாலை போன்ற பல விடயங்களை பார்வையிட்டார்.
அதன்போது எருவில் கிராமத்தின் பாரம்பரியத்தினை எடுத்துக்காட்டும் இடங்கள் பற்றி கூறியபோது அதனை மீள் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு அமைவாக கொம்பு முறி சந்தி (கொம்புச்சந்தி) அதன் அருகில் உள்ள தர்மக்கிணற்றடி இடம் போன்றவற்றின் வரலாறுகளைப்பற்றி எடுத்துக்கூறியபோது இந்த இடங்களை சிரமதானம் செய்து பாரம்பரியங்களை கட்டிக்காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நேற்று சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
0 Comments