கடந்த பெப்ரவரி மாதம், ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்காக லெபனான் அனுப்பப்பட்ட 49 இலங்கை இராணுவத்தினர் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அமைதிகாப்புப் படை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.
|
பகுப்பாய்வுகளின் போது, குறித்த 49 பேர் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவர்களை இலங்கை அரசாங்கம் தமது சொந்த செலவில் மீண்டும் இலங்கைக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும். வழமையாக ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது இலங்கை மனிதஉரிமைகள் அமைப்பின் பகுப்பாய்வு அனுமதி தேவையானது என்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் பேச்சாளர் நிக் பின்பேக் தெரிவித்துள்ளார்.
|
0 Comments