நேற்று தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.12 மணிக்கு அளுத்கம, மீகஹதென்ன, சூரிய கந்த மற்றும் செல்ல கதிர்காமம் போன்ற பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென், மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை கடுமையாகப் பெய்யுமிடத்து தற்காலிக புயல் காற்றும் இடி முழக்கமும் ஏற்படும் என்பதால் மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.(15)
0 comments: