வடக்கு கிழக்கில் தற்பொழுது குளிரூடனான காலநிலை காணப்படுகின்றது. இதற்கு காரணம் வளிமண்டளத்தில் காணப்படும் ஈரப்பதனே ஆகும்.இந்த காலநிலை பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வடக்கு கிழக்கில் இக்கால பகுதியில் பனி காணப்படுவது வழமை.
இதன் காரணமாக எதிர் வரும் 12 ஆம் திகதி முதல் சுமார் ஒரு வார காலத்திற்கு குறைந்த அளவான மழைவீழ்ச்சியையே எதிர்பார்க்க முடியும்.மழையின் பின்னரும் பனியுடனான காலநிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்று அதிகாலையும் நுவரெலியாவின் உள்ள குதிரை மைதானம் பனியினால் படர்ந்து காணப்பட்டது.நுவரெலியாவில் 4 செல்சியஸ்சாக வெப்பநிலை காணப்பட்டது.நுவரெலியாவின் பல இடங்களில் இவ்வாறு தரையில் பனி படர்ந்திருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்
0 Comments