2017 – 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமான வெட்டுபுள்ளிகளை அறிவிப்பதற்கு 3 மாத காலமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள்ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017 – 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள்ஆணைக்குழு அறிவித்துள்ளது. இணையத்தளத்தின் ஊடாகவே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இம்முறை ஒரு கற்கை நெறி புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இது களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிதிக் கற்கைகள் தொடர்பான கற்கைநெறியாகும். இதற்கு மேலதிகமாக சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் வைத்திய விஞ்ஞான கற்கை நெறி ஆரம்பிக்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதன் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீட கற்கைநெறிக்காக 75 மாணவர்களும், வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 75 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்தக்கல்வி ஆண்டுக்காக வைத்திய பீட கற்கைநெறிக்கு 1470 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கடந்த வருடத்திலும் பார்க்க 160 மாணவர்கள் இம்முறை மேலதிகமாக சேர்த்துக்க கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.
கற்கை நெறியைத் தெரிவு செய்யும் போது அல்லது ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுமாயின் அது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் மானியஆணைக்குழுவிடம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொhடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியும்


0 Comments