சர்ச்சைக்குறிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது அரசியலில் புரட்சிகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக ஜனவரியிலிருந்து அது தொடர்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் துரும்பாக பயன்படுத்தப்பட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. -
0 Comments