Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி ஜனவரியில்

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று போட்டி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் மஹின் அடுவரல்ல தெரிவித்துள்ளார்.
15 வயதிற்கு உட்பட்ட சிங்கர் வெற்றிக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிக்கமைவாக இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு அமைய இந்தப் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் தலையீட்டில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments