Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்பந்தனின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலேயே நழுவிய மகிந்த!

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வர­வு–­செ­ல­வுத்­திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தினை எதிர்க்­கட்­சித் ­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் முற்­பகல் 10.17 மணிக்கு ஆரம்­பித்தார்.
வரவு செல­வுத்­திட்டம் குறித்து சிறு குறிப்­பு­ரை­யொன்றை ஆற்­றி­விட்டு பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்கு அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வது மிகவும் அவ­சி­ய­மா­னது. அதற்­கான முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்­டினை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என்­ற­வாறு தொடர்ந்­தவர் இதனை குழப்­பு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ரது அணி­யி­னரும் முயற்­சிப்­ப­தாக குற்றம் சாட்­டி­ய­தோடு இந்த நாட்டின் தேசி­யப்­பி­ரச்­சினை தொடர்பில் மகிந்த ராஜ­பக்ஷ கடந்த காலத்தில் கொண்­டி­ருந்த நிலைப்­பா­டுகள் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல விட­யங்­களை உரிய சான்­று­க­ளுடன் குறிப்­பிட்டு மிகக் கடு­மை­யாக விமர்­சித்­த­வாறு தனது உரையைத் தொடர்ந்­த­வண்­ண­மி­ருந்தார்.
இந்த சம­யத்தில் முற்­பகல் 10.55இக்கு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ருடன் சில அவ­ரது அணி உறுப்­பி­னர்­களும் சபைக்குள் பிர­வே­சித்­தனர். இந்­நி­லையில் சபைக்குள் பிர­வே­சித்த முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ எதிர்க்­கட்சித் தலை­வரின் ஆச­னத்­திற்கு அரு­கா­மை­யி­லேயே அடுத்த நிரலில் ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் தனது ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்தார்.
மகிந்த ராஜ­பக்ஷ சபைக்குள் வந்­து­விட்­டதை அறிந்த கூட்­ட­மைப்பின் ஏனைய உறுப்­பி­னர்­களும் சபைக்குள் பிர­வே­சித்­தனர். அவ்­வா­றான நிலையில் தனது உரையை தொடர்ந்து கொண்­டி­ருந்த சம்­பந்தன், முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் தந்­தை­யான டி.ஏ.ராஜ­பக்ஷ எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று தனி­யாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்­சியை ஆரம்­பித்­தமை, மகிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் தனக்கும் உள்ள நீண்ட பல­மான உறவு என்­பன தொடர்பில் கருத்­துக்­களை கூறி­ய­தோடு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­தினை எதிர்ப்­ப­தற்­கான காரணம்? , அதி­கா­ரப்­ப­கிர்­வினை விரும்­பாது இனங்­க­ளுக்குள் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­கின்­ற­மைக்­கான காரணம்? உள்­ளிட்ட பல கேள்­வி­களை தொடுக்­க­லானார்.
சம்­பந்­தனின் உரையை புன்­ன­கை­யுடன் தனது தாடையில் கைவைத்­த­வாறே மகிந்த ராஜ­பக்ஷ பார்த்­துக்­கொண்­டி­ருந்தார். சம்­பந்தன் மகிந்த ராஜ­ப­க்ஷவை பார்த்­த­வாறு அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு நீங்கள் முழு­மை­யான ஆத­ரவு அளிக்க வேண்டும். அது உங்­களின் கடமை. அர­சியல் செய்­யுங்கள் வெற்­றி­பெ­றுங்கள் அது­வேறு. ஆனால் அந்த விட­யத்­தினை அதற்­காக பயன்­டுத்­தா­தீர்கள் என்­றெல்லாம் கருத்­துக்­களை முன்­வைத்தார். இவை எவற்­றுக்கும் எந்­த­வொரு கருத்­துக்­க­ளையும் முன்­வைக்­காது அமை­தி­யாக முக­ம­லர்ச்­சி­யுடன் சம்­பந்­தனை பார்த்­த­வா­றி­ருந்தார் மகிந்த ராஜ­பக்ஷ. இதன்­போது இடை­யி­டையே லெஹான் ரத்­வத்த உட்­பட சில உறுப்­பி­னர்கள் அவ்­வவ்­போது கருத்­துக்­களை முன்­வைக்க முனைந்­த­போதும் அச்­சந்­தர்ப்­பங்­களில் தனது கையை காட்டி அமை­தி­யாக இருங்கள் என்று மகிந்த அறி­வுரை வழங்­கி­ய­வாறு இருந்தார்.
இதன் பின்னர் வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான தனது உரையைத் ஆரம்­பித்த மகிந்த ராஜ­பக்ஷ எதிர்க்­கட்­சித்­த­லைவர், சம்­பந்தன் உணர்­வு­பூர்­வ­மாக பேசினார். அவ­ரு­டைய உணர்வு எனக்கு புரி­கின்­றது என்று கூறி­விட்டு தனது வரவு செல­வுத்­திட்ட உரையைத் தொடர்­கின்றேன் என்று கூறி­ய­வாறு தனது நீண்ட உரையை தொடந்தார்.
எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­தனின் கேள்­வி­க­ளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதுதொடர்பிலான கருத்துக்களை வெளியிடாது தனது வரவு செலவுத்திட்ட உரை நிறைவடைந்ததும் அமைதியாக சற்று நேரம் ஆசனத்தில் அமர்ந்திருந்து விட்டு எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து செல்ல அவர் பின்னலேயே சபையை விட்டு வெளியேறிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments