மட்டக்களப்பு - காயாங்குடா பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். உழவு இயந்திரம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற போது, சாரதிக்கு அருகில் அமர்ந்து வந்த இளைஞனே தவறி கீழே விழுந்து சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு தம்பானம்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபாகரன் லவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments